×

ராமேஸ்வரம் அருகே தெற்குவாடி கிராமத்தில் கடல் அரிப்பு: 50 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் தடுப்புச்சுவர் கட்டித்தர கோரிக்கை..!!

ராமேஸ்வரம் அருகே கடல் அரிப்பால் 50 வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்குவாடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கொந்தளிப்பால் அடிக்கடி கடல்நீர் ஊருக்குள் நுழைந்துவிடுகிறது. இதனால் 50 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறும் அப்பகுதி மீனவர்கள் அரிப்பை தடுக்க கற்களை கொட்டித்தரவேண்டும் என்றும் தடுப்பு சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கடல் அரிப்பு குறித்து ராமநாதபுர மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, மாவட்ட அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் பூகார் கூறினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லையென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். …

The post ராமேஸ்வரம் அருகே தெற்குவாடி கிராமத்தில் கடல் அரிப்பு: 50 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் தடுப்புச்சுவர் கட்டித்தர கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : South Wadi Village ,Rameswaram ,Dushanwadi ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!